மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆதி புருஷ் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் பிரபாஸ் ராமராகவும், கிர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். இந்த படம் வெளியான சமயத்தில் இதில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மற்றும் வசனங்கள் சர்ச்சையை எழுப்பின.
அதேசமயம் பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளில் நடிகர் பிரபாஸுக்கு ரசிகர் வட்டம் பெருகி உள்ளது. அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த ரசிகை ஒருவர் ஆதி புருஷ் படம் பார்ப்பதற்காக டோக்கியோவில் இருந்து கிட்டத்தட்ட 5,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து சிங்கப்பூருக்கு வந்து ஆதி புருஷ் படத்தை பார்த்துள்ளார்.
அந்த படம் பார்க்கும்போது தன் கையில் இருந்த ஆதி புருஷ் படத்தின் சிறிய போஸ்டர் ஒன்றை காண்பித்தபடி, தான் கற்றுக் கொண்ட தெலுங்கு மொழியிலேயே தான் பிரபாஸின் மிக தீவிரமான ரசிகை என்று பேசி ஆச்சரியப்படவும் வைத்தார் அந்த ரசிகை. இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.