நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' |
மலையாள நடிகர்கள் பெரும்பாலும் தமிழில் நடித்து விடுவார்கள். பிரேம் நசீர் காலத்தில் இருந்து பகத் பாசில் வரை அது தொடர்கிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறார் நிகில். இவர் மோகன்லாலின் தங்கை மகன். இவருக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த புதுமுகம் நேத்ரா ஹீரோயினாக நடிக்கிறார். மற்றும் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகன் சஞ்சய் சங்கர், வின்சென்ட் அசோகன், சுப்பு, சங்கீதா, மாறன், சுவாமிநாதன், தனி மற்றும் பலர் நடிக்கிறார்கள். தொட்டி ஜெயா, சக்கரைகட்டி, என்னமோ நடக்குது உள்பட பல படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜூட் ரோமரிக் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
படம் பற்றி இயக்குனர் ஜூட் ரோமரிக் கூறியதாவது: மலையாளத்தில் நிகில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இதுதான் முதல் படம். வாழ்கையில் சில நேரங்களில் நடக்கும் விஷயம் நம்மை பயப்படுத்தி தவறான முடிவு எடுக்க தூண்டும். ஆனால் சற்றே சிந்தித்தால், என்ன நடந்தது என்பதற்கும், என்ன நடக்கிறது என்பதற்கும் சம்பந்தமே இருக்காது. கதையின் நாயகன் வாழ்வில் நடக்கும் இப்படி ஒரு சம்பவத்தை நகைச்சுவை கலந்த அழகான காதல் கதையாக கூறும் படமாக உருவாகிறது. என்றார்.