ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
அப்பா டாக்கீஸ் சார்பில் எச்.பாட்சா தயாரித்துள்ள படம் “நேற்று நான் இன்று நீ". திரைப்படக் கல்லூரியில் பயின்று சில படங்களையும் தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கும். பி.நித்தியானந்தம் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கிறார். புதுமுகங்கள் ஆதித், வினிதா, தமிம், வினுபிரியா இவர்களுடன் ஆர்.அரவிந்தராஜ், பிஜாய் மேனன், தயாரிப்பாளர் பாட்சா நடிக்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்கிறார், கல்யாண் இசை அமைக்கிறார்.
படம் பற்றி தயாரிப்பாளர் எச்.பாட்சா கூறியதாவது: குறுகிய கால அளவில் குறைந்த முதலீட்டில், நல்ல கதையையும் நடிக நடிகையர்களையும் நம்பி தேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்போடு இந்த படம் தயாராகிறது. சுவாரசியமான கதை களத்தோடு திகிலும் மர்மமும் நிறைந்த படமாக உருவாகிறது. அயல்நாட்டிலிருந்து தாய் மண்ணுக்கு வந்து தன் பூர்வீக சொத்தை மீட்க வந்த நாயகி எதிர்கொள்ளும் அமானுஷ்ய திகில் மர்மங்களையும், தெய்வ சக்தியையும் சொல்லும் மாறுபட்ட படம் இது. அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. என்றார்.