ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
ஏசியன் சினிமாஸ் என்ற நிறுவனம் தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களைக் கட்டி திறந்து வருகிறது. அந்த விதத்தில் மகேஷ்பாபு, விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜுன் ஆகியோரது பெயரில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
அடுத்து ஏசியன் சினிமாஸ் நிறுவனம் சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மல்டிபிளக்ஸ் தியேட்டரை கட்டப் போகிறது. நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற அல்லு அர்ஜுனின் எஎஎ மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறப்பு விழாவின் போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து ஏசியன் சினிமாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுனில் நரங் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் தற்போது சென்னையில் எந்த ஒரு நடிகருக்கும் சொந்தமாக தியேட்டர்கள் கிடையாது. நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உள்ள சிவகார்த்திகேயன் முதல் முறையாக தியேட்டர் தொழிலில் இறங்க உள்ளார்.