பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
மலையாளத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் வெளியான படம் அய்யப்பனும் கோஷியும். அந்தப்படத்தில் ஹீரோக்களை சுற்றியே கதை பின்னப்பட்டிருந்தாலும் பிஜு மேனனின் மனைவியாக ஆதிவாசி இனத்தை சேர்ந்த துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்திருந்தார் நடிகை கவுரி நந்தா. அந்த படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது. இவர் தற்போது சொர்க்கத்திலே கட்டெறும்பு என்ற படத்திலே நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் வினித் ஸ்ரீனிவாசனின் தம்பியும், நயன்தாரா நடித்த லவ் ஆக்சன் டிராமா படத்தின் இயக்குனருமான தயன் ஸ்ரீனிவாசன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஜீப் ஒன்றில் கவுரி நந்தா பயணிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஜீப்பை ஓட்டிய நடிகரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகில் இருந்த மின்சார கம்பத்தின் மீது மோதியது. நல்ல வேலையாக அதில் பயணித்த கவுரி நந்தா உட்பட நால்வரும் உடனடியாக வண்டியை விட்டு இறங்கி விட்டனர். ஜீப் மெதுவான வேகத்தில் சென்றதால் பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தன்னிடம் விசாரித்த அனைவருக்கும் தன்னுடைய நன்றியையும் தெரிவித்துள்ளார் கவுரி நந்தா.