கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
மலையாளத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் வெளியான படம் அய்யப்பனும் கோஷியும். அந்தப்படத்தில் ஹீரோக்களை சுற்றியே கதை பின்னப்பட்டிருந்தாலும் பிஜு மேனனின் மனைவியாக ஆதிவாசி இனத்தை சேர்ந்த துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்திருந்தார் நடிகை கவுரி நந்தா. அந்த படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது. இவர் தற்போது சொர்க்கத்திலே கட்டெறும்பு என்ற படத்திலே நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் வினித் ஸ்ரீனிவாசனின் தம்பியும், நயன்தாரா நடித்த லவ் ஆக்சன் டிராமா படத்தின் இயக்குனருமான தயன் ஸ்ரீனிவாசன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஜீப் ஒன்றில் கவுரி நந்தா பயணிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஜீப்பை ஓட்டிய நடிகரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகில் இருந்த மின்சார கம்பத்தின் மீது மோதியது. நல்ல வேலையாக அதில் பயணித்த கவுரி நந்தா உட்பட நால்வரும் உடனடியாக வண்டியை விட்டு இறங்கி விட்டனர். ஜீப் மெதுவான வேகத்தில் சென்றதால் பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தன்னிடம் விசாரித்த அனைவருக்கும் தன்னுடைய நன்றியையும் தெரிவித்துள்ளார் கவுரி நந்தா.