அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அங்கு அவருடைய 'கென்னடி' என்கிற திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த படத்தை திரையிட்ட பிறகு நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசிய அனுராக் காஷ்யப், "முதலில் இந்தப்படத்தில் நடிக்க என்னுடைய மனதில் இருந்தவர் நடிகர் விக்ரம். அதற்கு காரணம் அவருடைய உண்மையான பெயர் 'கென்னடி'. ஆனால், அவரை நான் தொடர்பு கொண்டபோது என் அழைப்புக்கு அவர் எந்த பதிலும் அளிக்காததால் வேறொருவரை கதாநாயகனாக தேர்ந்தெடுத்து இப்படத்தை உருவாக்கியுள்ளேன் என்று தெரிவித்தார்.
அனுராக் காஷ்யப் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி நெட்டிசன்கள் விக்ரமை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் இந்த விடியோவிற்கு நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
"அன்புக்குரிய அனுராக் காஷ்யப், ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த நமது உரையாடலை கூறுகிறேன். இந்த படத்திற்காக நீங்கள் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், அதற்கு நான் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் நண்பர் ஒருவர் மூலமாக நான் அறிந்த உடன் உங்களை தொடர்பு கொண்டு எனக்கு உங்களுடைய எந்த மெயிலும், மெசேஜூம் வரவில்லை என தெரிவித்தேன். மேலும், நீங்கள் என்னை தொடர்பு கொண்ட மெயில் ஐடி மற்றும் என் மொபைல் நம்பரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் மாற்றிவிட்டேன் என்று அப்போதே உங்களிடம் கூறினேன். நீங்கள் இயக்கியுள்ள கென்னடி படத்தை பார்க்க மிகுந்த ஆவலாக உள்ளேன். காரணம் அது என்னுடைய பெயரை கொண்டிருப்பதால். அன்புடன் கென்னடி என்ற சீயான் விக்ரம்” என்று தனது விளக்கத்தை பதிவிட்டுள்ளார்.