பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

வேகமாக வளர்ந்து வந்த இளம் பாலிவுட் நடிகர் ஆதித்யா சிங். ஆதிகிங், மாம் அண்ட் டாட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார், தொலைக் காட்சி தொடர்களில் நடித்து வந்தார். 33 வயதான ஆதித்யா சிங் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் வசித்து வந்தார். நேற்று மதியம் அவரை தேடி நண்பர் ஒருவர் அவரது வீட்டுக்கு சென்றார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நண்பர் வெகுநேரமாக தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. எனவே அவர் மாற்று சாவி மூலம் வீட்டை திறந்து உள்ளே சென்றார்.
அப்போது குளியல் அறையில் ஆதித்யா சிங் மயங்கி கிடந்தார் . உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். அதித்யா சிங் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாகவும அதன் காரணமாக அவர் மரணம் அடைந்தாகவும் கூறப்படுகிறது. திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.




