சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான அந்தாலஜி தொடர் 'மார்டன் லவ் சென்னை', இதில் ராஜு முருகன் இயக்கிய 'லால்குண்டா பொம்மைகள்' என்ற கதையில் ஷோபா என்ற கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்தவர் ஸ்ரீ கவுரி பிரியா. இவர் சினிமாவுக்கு புதிதில்லை. மிஸ்.ஹதராபாத்தாக தேர்வு பெற்ற இவர் தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ரைட்டர் பத்மபூசன்' படத்தின் நாயகியாக நடித்திருந்தார். இப்போது இந்த அந்தாலஜி படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
“தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. லால்குண்டா பொம்மையில் அக்மார்க் சென்னை பெண்ணாக நடித்திருக்கிறேன். நடிப்புக்கு கிடைத்து வரும் பாராட்டுகள் பெரிய நம்பிக்கை தருகிறது. தற்போது இரண்டு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். அது பற்றிய அறிவிப்பை தயாரிப்பு தரப்பே வெளியிடுவார்கள். மேலும் கதைகள் கேட்டு வருகிறேன். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து நடிப்பேன். என்கிறார் கவுரி பிரியா.