மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பாலிவுட்டில் பிரபல இயக்குனரும், நடிகருமாக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். தமிழில் இமைக்கா நொடிகள் என்கிற படத்தில் வில்லனாக நடித்தவர் இவர்தான். இவர் இயக்கியுள்ள கென்னடி என்கிற திரைப்படம் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக கலந்து கொண்டது. இந்த படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் ராகுல் பட் என்பவர் நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அனுராக் காஷ்யப் முதலில் அழைத்தது நடிகர் விக்ரமை தான்.
இதுகுறித்து தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள அனுராக் காஷ்யப், "இந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் இந்த கதையை கூறினேன். அதற்காக விக்ரமின் ஒரிஜினல் பெயரான கென்னடி என்கிற பெயரையே இந்த படத்திற்கு டைட்டிலாகவும் வைத்தேன்" என்று கூறியுள்ளார். ஆனால் விக்ரமிடமிருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்காததால் தான் அவருக்கு பதிலாக நடிகர் ராகுல் பட்டை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளாராம் அனுராக் காஷ்யப்.