படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், மும்பையில் தான் கலந்துகொள்ள வேண்டிய படப்பிடிப்பிற்கு செல்வற்தாக காரில் சென்று கொண்டிருந்தார். போக்குவரத்து நெரிசல் காரணமாக உரிய நேரத்தில் படப்பிடிப்பிற்கு காரில் செல்ல முடியாது என்பதால் காரை விட்டு இறங்கி அந்த வழியாக வந்து இந்த ஒரு இருசக்கர வாகன ஓட்டியிடம் லிப்ட் கேட்டு ஏறி சென்றார். இது குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக வெளியானது.
பலரும் இந்த வயதிலும் அவர் கடைபிடிக்கும் நேரந்தவறாமை குறித்து பாராட்டினாலும் ஒரு சிலர் மட்டும் வழக்கம்போல குதர்க்கமாக, அந்த வாகனம் ஓட்டியவர் ஹெல்மெட் அணியவில்லை, கூடவே அமிதாப்பச்சனும் ஹெல்மெட் அணியவில்லை, அதனால் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா எனப கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த விஷயம் பிரச்னையாக அமிதாப்போ, ‛‛அது படப்பிடிப்பில் நிகழ்ந்த விஷயம்'' என கூறி சமாளித்தார்.
இந்த நிலையில் அமிதாப்பச்சன் ஒரு போலீஸ் வாகனத்தின் முன்பாக தான் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு “கைது செய்யப்பட்டேன்” (Arrested) என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கு எல்லாம் யாரையும் கைது செய்ய மாட்டார்கள், அபராதம் மட்டுமே விதிப்பார்கள் என்றும் இது தன்னை விமர்சித்த சில நெட்டிசன்களுக்காக அமிதாப் பச்சன் கிண்டலாக கொடுத்த பதிலடி என்றும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.