இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. தற்போது ஹிந்தியில் ஷாரூக்கான் ஜோடியாக 'ஜவான்' படத்திலும் நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை மணந்து, இரண்டு குழந்தைகளுக்கத் தாயாகி சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார்.
அவரும் கணவரும் சேர்ந்து படத் தயாரிப்பு கம்பெனி ஒன்றையும் ஆரம்பித்து படங்களைத் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் மிகவும் பிரபலமாக இருந்து மூடப்பட்ட அகஸ்தியா திரையரங்கை நயன்தாரா வாங்கி உள்ளதாக ஒரு தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது.
அந்தத் தியேட்டர் இருந்த இடத்தில் புதிதாக இரண்டு தியேட்டர்களைக் கட்டவும் அவர் முடிவு செய்துள்ளாராம். அடுத்த வருடம் தியேட்டர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சினிமாவில் அறிமுகமாகி, சினிமா இயக்குனரை மணந்து, சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, தற்போது தியேட்டரையும் வாங்கியுள்ள நயன்தாராவுக்கு திரையுலகினரின் பாராட்டு வந்து சேரும். நயன்தாரா ஏற்கெனவே 'சாய் வாலே' என்ற டீக்கடை வியாபாரத்தில் பெரும் முதலீடு செய்துள்ளார்.
சென்னையில் இதற்கு முன்பு நடிகர் சிவாஜி கணேசன், நாகேஷ், ஜெயப்பிரதா உள்ளிட்டோர் சொந்தமாக தியேட்டர்களை நிர்வகித்து பின்பு அதை விற்றுவிட்டனர். நடிகர் விஜய் விருகம்பாக்கம் நேஷனல் தியேட்டரை வாங்கி அந்த இடத்தில் தியேட்டர்களுடன் கூடிய சந்திரா மால் என காம்ப்ளக்ஸ் கட்டினார். தயாரிப்பாளர் கேஈ ஞானவேல் ராஜா, சென்னை, பாடி பகுதியில் இருந்த ராதா தியேட்டரை வாங்கி பின்பு அதை கிரீன் சினிமாஸ் என்ற பெயரில் இரண்டு தியேட்டர்களைக் கட்டி நடத்தி வருகிறார்.