மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை வென்ற 1983ம் ஆண்டு அணி கேப்டனாக இருந்தவர் கபில்தேவ். அந்தக் காலத்தில் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர். அவரைப் போல ஒரு ஆல்ரவுண்டர் இந்திய கிரிக்கெட் அணியில் அதற்கு முன்பு இருந்ததில்லை. பல சாதனைகளைப் படைத்தவர். அவர் தற்போது நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசிய புகைப்படத்தைப் பகிர்ந்து, “சிறந்த மனிதருடன் இருப்பது பெருமையும், சிறப்பும் ஆகும்,” என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் கூட ரஜினிகாந்தை கிரிக்கெட் வீரர்களான வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சந்தித்துப் பேசி புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தனர். ரஜினிகாந்த், கபில்தேவ் சந்திப்பு பற்றி சினிமா ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.