அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை வென்ற 1983ம் ஆண்டு அணி கேப்டனாக இருந்தவர் கபில்தேவ். அந்தக் காலத்தில் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர். அவரைப் போல ஒரு ஆல்ரவுண்டர் இந்திய கிரிக்கெட் அணியில் அதற்கு முன்பு இருந்ததில்லை. பல சாதனைகளைப் படைத்தவர். அவர் தற்போது நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசிய புகைப்படத்தைப் பகிர்ந்து, “சிறந்த மனிதருடன் இருப்பது பெருமையும், சிறப்பும் ஆகும்,” என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் கூட ரஜினிகாந்தை கிரிக்கெட் வீரர்களான வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சந்தித்துப் பேசி புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தனர். ரஜினிகாந்த், கபில்தேவ் சந்திப்பு பற்றி சினிமா ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.