நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை வென்ற 1983ம் ஆண்டு அணி கேப்டனாக இருந்தவர் கபில்தேவ். அந்தக் காலத்தில் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர். அவரைப் போல ஒரு ஆல்ரவுண்டர் இந்திய கிரிக்கெட் அணியில் அதற்கு முன்பு இருந்ததில்லை. பல சாதனைகளைப் படைத்தவர். அவர் தற்போது நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசிய புகைப்படத்தைப் பகிர்ந்து, “சிறந்த மனிதருடன் இருப்பது பெருமையும், சிறப்பும் ஆகும்,” என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் கூட ரஜினிகாந்தை கிரிக்கெட் வீரர்களான வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சந்தித்துப் பேசி புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தனர். ரஜினிகாந்த், கபில்தேவ் சந்திப்பு பற்றி சினிமா ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.