கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
மிர்ச்சி சிவா நடித்த வணக்கம் சென்னை, விஜய் ஆண்டனி நடித்த காளி போன்ற படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. மேலும், பேப்பர் ராக்கெட் என்ற ஒரு வெப் தொடரையும் அவர் இயக்கினார். இது ஜீ5 சேனலில் வெளியானது. இந்த நிலையில் அடுத்தபடியாக தனது மூன்றாவது படத்தை ஜெயம் ரவி- நித்யா மேனன் ஆகியோரை வைத்து கிருத்திகா உதயநிதி இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. வருகிற அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏற்கனவே கிருத்திகா இயக்கிய வணக்கம் சென்னை படத்திற்கு இசையமைத்த அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.