மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஜெயிலர் படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த், தற்போது தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‛லால் சலாம்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் விக்ரமை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் அவர் மறுப்பு தெரிவித்ததாகவும், அதன் பிறகு கதை கேட்டு பிடித்து, நடிக்க யோசித்து வந்த நிலையில் லைகா நிறுவனம் இந்த படத்தில் அவர் நடிப்பதற்காக பெரும் தொகையை சம்பளமாக தருவதாகவும் தெரிவித்துள்ளது. இப்போது இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். சம்பளம் மட்டுமல்ல, படத்தில் அவரது கேரக்டரும் வலுவாக உள்ளதாம். அதனால் விக்ரம் ஒப்புக் கொள்வார் என்கிறார்கள். விரைவில் அவர் சம்மதம் சொன்னதோடு செய்தியோடு அறிவிப்பு வெளியாகலாம்.