பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இயக்குனர் பாரதிராஜா தனது திரைப்படங்களில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு 'ஆர்' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை வைத்துள்ளார், அவர்கள் பிற்காலத்தில் பெரிய நடிகைகளாக வளர்ந்தார்கள். அந்த வரிசையில் தற்போது அவரது மகன் மனோஜ் இயக்கும் 'மார்கழி திங்கள்' என்ற படத்திற்கு தேர்வாகி உள்ள புதுமுகத்திற்கு 'ரக்ஷனா' என்று பெயர் சூட்டி உள்ளார். இந்த படத்தை சுசீந்திரன் தயாரிக்கிறார்.
இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் மூலம் என் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தை வெண்ணிலா புரொடக்ஷன் சார்பில் இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இப்படத்தின் நாயகியை மக்களாகிய நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள், இந்த கதையின் நாயகிக்கு ராதிகா, ராதா, ரேவதி, ரேகா போன்று ஆர் வரிசையில் 'ரக்ஷனா' என்று பெயர் சூட்டுகிறேன். இவர் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வெற்றியடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.