மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்து தற்போது இயக்குனர் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் மாமன்னன். வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வருகின்ற ஜூன் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் மாரி செல்வராஜ் அளித்த பேட்டியில், "உதயநிதி அழைத்து அவரின் கடைசி படத்தை என்னை இயக்குமாறு கேட்டுக்கொண்டார். நான் அப்போது துருவ் விக்ரம் மற்றும் தனுஷ் படங்களின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தேன். அதனால் உதயநிதி தனுஷ் மற்றும் விக்ரம் இருவருடனும் தனிப்பட்ட முறையில் என் கடைசி படத்தை மாரி செல்வராஜ் இயக்க வேண்டும் என்று பேசியுள்ளார். அதற்கு இருவரும் மாமன்னன் படத்தை முதலில் இயக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்" என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் மாரி செல்வராஜ்.