நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தன் வீட்டில் இருந்த நகைகளை காணவில்லை என்று புகார் செய்தார். இதை தொடர்ந்து வீட்டில் வேலை பார்த்த ஈஸ்வரி என்ற பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடம் நகைகளை மீட்டனர் வழக்கு, விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா, தனது சொகுசு காரின் சாவியை காணவில்லை என்று தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில், ஏப்ரல் 23ம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது தனது காரின் மற்றொரு சாவி காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கு பதிந்து போலீசார் கூறியதாவது : சொகுசு காருக்கு போலியான சாவி செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட நிறுவனம் மூலம் மட்டும் மாற்று சாவியை பெற முடியும். அதற்கும் போலீசாரின் எப்.ஐ.ஆர். நகலை கார் நிறுவனத்திடம் சமர்ப்பித்தால் மட்டுமே சாவி கிடைக்கும். எனினும் சவுந்தர்யாவின் கார் சாவி தொலைந்ததா அல்லது திருடப்பட்டதா என விசாரிக்கிறோம் என்றனர்.