‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! |
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தற்போது நடிகர் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்துள்ளார். அதேபோல் நடிகர் சிரஞ்சீவி உடன் ‛போலா சங்கர்' படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் இடைவெளியில் திரைக்கு வருகிறது.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் தமன்னா அவர் கூறியது: "திரையுலகின் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி இருவருடன் இணைந்து நான் நடித்துள்ள படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது சந்தோஷமாக உள்ளது. பெரும்பாலும் ஹீரோக்கள் நடித்த படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாவது அடிக்கடி நடந்துள்ளது. ஆனால் கதாநாயகிகளுக்கு அரிதாக தான் நடக்கும். எனக்கு இப்போது இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழில் ரஜினி உடன் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதியும், தெலுங்கில் சிரஞ்சீவி உடன் நடித்த போலா சங்கர் ஆகஸ்ட் 11ம் தேதியும் வெளியாக இருக்கிறது." என்று சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.