பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு |
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தற்போது நடிகர் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்துள்ளார். அதேபோல் நடிகர் சிரஞ்சீவி உடன் ‛போலா சங்கர்' படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் இடைவெளியில் திரைக்கு வருகிறது.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் தமன்னா அவர் கூறியது: "திரையுலகின் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி இருவருடன் இணைந்து நான் நடித்துள்ள படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது சந்தோஷமாக உள்ளது. பெரும்பாலும் ஹீரோக்கள் நடித்த படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாவது அடிக்கடி நடந்துள்ளது. ஆனால் கதாநாயகிகளுக்கு அரிதாக தான் நடக்கும். எனக்கு இப்போது இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழில் ரஜினி உடன் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதியும், தெலுங்கில் சிரஞ்சீவி உடன் நடித்த போலா சங்கர் ஆகஸ்ட் 11ம் தேதியும் வெளியாக இருக்கிறது." என்று சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.