ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இணைந்து நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், சாய் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் 60 நாட்கள் நடக்கிறது.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பல்வேறு கலாச்சாரங்களுக்கு மத்தியில் நம் தேசத்தின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றைப் பேசும் படமாக இது இருக்கும். அதிரடி ஆக்ஷன்களுடன் புதுமையான கதைக் களத்தில் பயணிக்கும். ரசிகர்களுக்கு ஒரு நிறைவான அனுபவமாக இருக்கும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவக்க விழாவில் தயாரிப்பாளர்கள் கமல்ஹாசன், ஆர்.மகேந்திரன், இணை தயாரிப்பாளர் வக்கீல் கான், பொது மேலாளர் மற்றும் தலைவர் லாடா குருதேன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். படப்பிடிப்புகள் காஷ்மீரில் 60 நாட்கள் நடக்கிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.