மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் நடந்து முடிந்தது. இதில், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மீறி அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த சர்ச்சையானது இப்போது வரை சோஷியல் மீடியாவில் புகைந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஜோ மைக்கேல் என்பவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம் வெற்றியில் முறைகேடு இருப்பதாக ஆர்.டி.ஐ பதிவு செய்திருந்தார். அதில், விஜய் டிவி, பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினருக்கு எதிராக பல கேள்விகளை அடுக்கியிருந்தார். அதற்கு இன்று வரை சரியான பதில் கிடைக்காத நிலையில், ஜோ மைக்கேல் அளித்த ஆர்டிஐ மனுவை திரும்ப பெற கூறி அசீமின் ஆதரவாளர்கள் மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இந்த செய்தி தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.