அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் நடந்து முடிந்தது. இதில், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மீறி அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த சர்ச்சையானது இப்போது வரை சோஷியல் மீடியாவில் புகைந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஜோ மைக்கேல் என்பவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம் வெற்றியில் முறைகேடு இருப்பதாக ஆர்.டி.ஐ பதிவு செய்திருந்தார். அதில், விஜய் டிவி, பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினருக்கு எதிராக பல கேள்விகளை அடுக்கியிருந்தார். அதற்கு இன்று வரை சரியான பதில் கிடைக்காத நிலையில், ஜோ மைக்கேல் அளித்த ஆர்டிஐ மனுவை திரும்ப பெற கூறி அசீமின் ஆதரவாளர்கள் மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இந்த செய்தி தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.