லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து ‛ரங்கூன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகும் இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்று படக்குழுவினர் வீடியோ அறிவிப்புடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் சிவகார்த்திகேயன் படத்திற்கு முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.