அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படம் நேற்றே நாம் சொன்னபடி 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. படம் வெளியான நான்கே நாட்களில் 200 கோடி வசூல் என்பது சாதாரணமல்ல. முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்தையும் ரசிகர்கள் குடும்பத்துடன் சென்று பார்த்து வருகிறார்கள்.
முதல் பாகம் அளவிற்குக் கலகலப்பாக, சுவாரசியமாக இல்லை என்று சிலர் சொன்னாலும், இரண்டாம் பாகத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களிடம் இருப்பது தெரிகிறது. நேற்று வரை விடுமுறை நாள் என்பதால் வசூல் மழை பெய்திருக்கிறது.
இருப்பினும் கோடை விடுமுறை நாட்கள் என்பதால் வேறு எந்த பெரிய ஹீரோக்களின் படங்களும் வெளியாகவில்லை என்பதால் வசூல் தொடர்ந்து சிறப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் 32 நாட்களில் தான் 500 கோடி வசூலைத் தொட்டது.
அதைவிடக் குறைந்த நாட்களில் 'பொன்னியின் செல்வன் 2' 500 கோடி வசூலைத் தொடுமா என்பதே இப்போதைய கேள்வி. அது நடந்தால் தமிழ் சினிமாவில் ஒரு புதிய சாதனையாக அமையும்.