300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நடிகை ஸ்ரேயா தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் உள்ளே நுழைந்தார். தற்போது வரை படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இடையில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டாலும் கூட. கதாநாயகியாக நடிப்பதுடன், சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடவும் செய்கிறார். இந்த நிலையில் சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நிருபர் ஒருவர் அவரிடம் இந்த வயதிலும் எப்படி உடலை இப்படி கட்டுக்கோப்பாக வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார்.
ஆனால் ஸ்ரேயாவோ, ஏன் நடிகைகளிடம் மட்டும் இப்படி கேட்கிறீர்கள் ?. எந்த ஒரு தெலுங்கு ஹீரோவிடமாவது இப்படி கேட்டிருக்கிறீர்களா என்று கோபமாக பதில் கேள்வி கேட்டார். அந்த நிருபரோ இதை உங்களுக்கான பாராட்டாக எடுத்துக் கொள்ளலாமே என்று சாந்தமாக கூறியுள்ளார். ஆனாலும், “இதுவா பாராட்டு? என்னுடைய நண்பர்கள் சிலர் கூட பெண்களை பார்க்கும்போது வாவ் இரண்டு குழந்தைகள் பெற்றபின்னும் கூட இப்படி அழகாக இருக்கிறாயே என்பது போன்று பேசுகிறார்கள்.. இவையெல்லாம் ஒரு பெண்ணுக்கு நிச்சயமாக பாராட்டு அல்ல” என்று மீண்டும் தனது கருத்திலேயே பிடிவாதம் காட்டினார்.
தன்னிடம் கேட்கப்பட்ட கேள்வி, தனக்கான ஒரு பாராட்டு என்பதை புரிந்து கொள்ளாதது ஒரு பக்கம் இருக்க, அந்த கேள்விக்கான பதிலாக இன்னொரு கேள்வியை ஸ்ரேயா கேட்டது அந்த நிகழ்வில் கொஞ்ச நேரம் சலசலப்பையும் ஏற்படுத்தியது.