பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான ஷேன் நிகாம், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் படப்பிடிப்பு தளங்களில் போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும், சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவதில்லை என்றும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் கூறி இரு நடிகர்களுக்கும் மலையாள தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் இணைந்து தடை விதித்தது. இந்த நிலையில் இரு நடிகர்களும் மலையாள நடிகர் சங்கத்தில் விளக்க கடிதம் கொடுத்துள்ளனர்
ஸ்ரீநாத் பாசி கொடுத்துள்ள கடிதத்தில், தன்னை சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டும் இனி சங்கத்தின் விதிமுறைகளின் படி நடப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
ஷேன் நிகாம் எழுதியுள்ள கடிதத்தில் 'ஆர்டிஎக்ஸ்' படப்பிடிப்பு தடைபட்டது தனது தவறினால் அல்ல என்றும், உடல்நலக் குறைவால் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். போதை குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.