பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரது ஒரே மகள் ஆராத்யா பச்சன். சில யு டியூப் சேனல்களை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். 11 வயதான மைனர் பெண்ணான தன் மீது சில யு டியூப் சேனல்கள் தன்னுடைய உடல்நலம் குறித்து ஆதாராமற்ற வதந்திகளை வெளியிடுவதாக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பிரபங்களை 'டிரோல்' என்ற பெயரில் கிண்டலடிப்பது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. அவர்களின் குழந்தைகளைப் பற்றிக் கூட இப்படி நாகரீகமற்ற முறையில் 'டிரோல்' செய்து வருகிறார்கள்.
ஆராத்யா வழக்கில் நீதிமன்றம் தரப் போகும் தீர்ப்பு நாகரீகமற்ற முறையில் பதிவிடும் சிலருக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவில் இருக்க வேண்டும் என்றுதான் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.