கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' படம் அடுத்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் புரமோஷனை 'சோழர்களின் பயணம்' என இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலிருந்து ஆரம்பித்துள்ளார்கள். நேற்று கோவையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்து டில்லி, கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, திருச்சி ஆகிய ஊர்களுக்கும் 'பொன்னியின் செல்வன் 2' படக்குழு பயணமாக உள்ளது.
நேற்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோழர்களுக்கு கடும் அதிர்ச்சியை நிகழ்ச்சிக்கு வந்த பார்வையாளர்கள் கொடுத்தார்கள். நேற்று த்ரிஷா மேடையேறிய பின் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து 'லியோ, லியோ, லியோ' என கூச்சலிட்டார்கள். அது காதில் கேட்காதது போல த்ரிஷா நின்றிருந்தார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அஞ்சனாவும் அது வேறு ஏதோ என சமாளித்தார்.
ஒரு கட்டத்தில் அதற்கு மேற் சமாளிக்க முடியாமல் த்ரிஷா, ''லியோ' பத்தி கேக்கறீங்களா,” சிரித்துக் கொண்டே கேட்டார். “நீங்க கேட்டுட்டே இருக்கீங்க இந்த கேள்வியை…எங்க போனாலும் கேக்கப் போறீங்க…'லியோ'வோட ஷுட்ல இருந்துதான் வரேன். அதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது. ஆனா, லோகேஷ் ப்ரோ, உங்க தளபதி ரொம்பவே நல்லா இருக்காங்க, மத்தது 'லியோ' நிகழ்ச்சில பேசலாம்,” என ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துக்கிடையே பேசினார்.
'பொன்னியின் செல்வன் 2' குழு தமிழகத்தில் எங்கு சொன்றாலும் இப்படி விஜய்யின் 'லியோ' அப்டேட் கேட்டால் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோருக்கு 'சங்கடமா' இருக்குமே…?. எப்படி சமாளிக்கப் போகிறார்கள் ?.