'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28ம் தேதி 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. நேற்று இந்த படத்தின் ஆந்தம் பாடல் வெளியான நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கோயம்புத்தூரில் நடைபெறவிருக்கும் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாலை 4:30 மணிக்கு படக்குழுவினர் கலந்து கொள்கிறார்கள். இதில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் தாங்கள் சென்று இறங்கிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் விக்ரம். அந்த பதிவில் ‛கோயம்புத்தூர், இதோ வர்றோங்கண்ணா' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அவருடன் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.