கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. திருமணம், குழந்தைகளுக்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். அதேப்போல் நடிகர் மாதவன் தமிழ், இந்தி மொழிகளில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிகர் சித்தார்த் தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஒய்-நாட் சசிகாந்த் முதல் முறையாக ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை அவரே தயாரிக்கின்றார். இதில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் மூவரும் இணைந்து நடிக்கின்றனர். கிரிக்கெட் கதை களத்தை மையமாக கொண்டுள்ள இந்த படத்திற்கு 'தி டெஸ்ட்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.