இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த 2021 நவம்பர் மாதம் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான படம் மாநாடு. முதல்முறையாக இந்தியாவில் அதுவும் தமிழில் டைம் லூப் என்கிற கான்செப்டை மையப்படுத்தி உருவானது இந்த படம். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக இருந்ததுடன் ரசிகர்களுக்கு 100% பொழுதுபோக்கு படமாகவும் அமைந்தது. குறிப்பாக இந்த படத்தில் ஹீரோவாக நடித்த சிலம்பரசனுக்கும் வில்லனாக நடித்த எஸ்ஜே சூர்யாவிற்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதேசமயம் ஹீரோவை விட வில்லன் எஸ்ஜே சூர்யா இன்னும் ஒரு படி அதிகமாகவே ஸ்கோர் செய்தார் என்று கூட சொல்லலாம்.
இந்தநிலையில் இந்தப்படம் தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இதில் சிலம்பரசன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவானும் எஸ்ஜே சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கு முன்னணி நடிகரான ரவிதேஜாவும் நடிக்க இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் ரவிதேஜா முதன்முறையாக இந்தியிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறாராம். தமிழில் இயக்கிய வெங்கட்பிரபுவே இந்தப்படத்தின் இந்தி, தெலுங்கு ரீமேக்கை இயக்குவாரா அல்லது வேறு இயக்குனர் இயக்குவாரா என்பது குறித்து இனிமேல் தான் தெரிய வரும் என்கிறார்கள் தெலுங்கு திரை உலக வட்டாரத்தில்.