சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சூரி கதையின் நாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'விடுதலை'. ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று இப்படம் வியாபார ரீதியாகவும் வசூலைக் குவித்து வருகிறது.
இப்படத்தின் சிறப்புக் காட்சி ரஜினிகாந்த்திற்கு பிரத்யேகமாகத் திரையிட்டு காட்டப்பட்டது. தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குனர் வெற்றிமாறன், சூரி ஆகியோரிடம் படத்தைப் பார்த்ததும் பாராட்டிப் பேசியுள்ளார். அது மட்டுமல்ல டுவிட்டரிலும் படத்தைப் பற்றி அவருடைய பாராட்டுக்களைப் பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் பதிவிற்கு நன்றி தெரிவித்து சூரி, “இதுவரை கிடச்ச வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும், உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன். இறைவனுக்கு நன்றி,” என முதலில் ஒரு பதிவிட்டிருந்தார்.
பின் இருபது நிமிட இடைவெளியில் மீண்டும், “என்ன சொல்றதுன்னே தெரியலை தலைவரே... நெஞ்சார்ந்த நன்றிகள் .. என் கால்கள் தரையில் இல்லை.. கனவிலும் நினைக்காத தருணங்களை தற்போது வாழ்ந்து வருகிறேன்..,” ஒரு பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.




