ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிரபல பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத். படங்களில் நடிப்பதை விட விதவிதமான கவர்ச்சி ஆடைகளுக்காக பிரபலமானவர். கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், பூ இதழ்கள் போன்றவற்றில் செய்யப்பட்ட ஆடை அணிந்து புகைப்படங்களாக வெளியிடுவார்.
படு கவர்ச்சியான ஆடைகள் அணிந்ததாக, பொது இடங்களில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியதாக இவர் மீது ஏராளமான வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவர் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டு டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டார் அதில் “நான் அணிந்த ஆடைகளின் மூலம் உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இனி நீங்கள் வேறு உர்பியை பார்ப்பீர்கள்”என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு அவரது ரசிகர்கள் பலர் பாராட்டு தெரிவித்தனர். பலர் உங்கள் பலமே அதுதானே... நீங்கள் நல்ல ஆடைகள் அணிந்தால் நன்றாக இருக்க மாட்டீர்கள் என்றும் கருத்து தெரிவித்தனர். இந்த டுவிட்டை வெளியிட்ட சில மணி நேரத்திலே. “ஏப்ரல் பூல். நான் எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானவள் என்று எனக்கு தெரியும்” என்று பதிவிட்டுள்ளார். இதனால் உர்பி மீது ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.