மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பாரதிராஜாவிடம் பல ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஐசுஜான்சி. அவர் தற்போது நாவல் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தை எண்ட்லஸ் புரொடக்ஷன் சார்பில் அருணாசலகுமார் தயாரிக்கிறார். புதுமுகங்கள் அபிஷேக் ஜோசப்ராஜ், ஆதிரை சவுந்தர்ராஜன் நாயகன், நாயகிகளாக நடிக்கிறார்கள். ரகுநாத் இசை அமைக்கிறார், வசந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஊட்டியில் இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
படம் பற்றி ஐசுஜான்சி கூறியதாவது: நிஜத்தை இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும், நாம் நிஜமானவையே என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அந்த நிஜத்தை மாற்றும் ஒரு எண்ணமே நிஜமான எண்ணம். என்பதை படத்தின் மையக்கருவாக வைத்து கதைக்களத்தை அமைத்துள்ளேன். இதில் திகிலுடன், விறுவிறுப்பு, பரபரப்பு என அனைத்தும் நீக்கமற நிறைந்திருக்குமாறு திரைக்கதை அமைத்துள்ளேன். என்றார்.