வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

பாரதிராஜாவிடம் பல ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஐசுஜான்சி. அவர் தற்போது நாவல் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தை எண்ட்லஸ் புரொடக்ஷன் சார்பில் அருணாசலகுமார் தயாரிக்கிறார். புதுமுகங்கள் அபிஷேக் ஜோசப்ராஜ், ஆதிரை சவுந்தர்ராஜன் நாயகன், நாயகிகளாக நடிக்கிறார்கள். ரகுநாத் இசை அமைக்கிறார், வசந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஊட்டியில் இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
படம் பற்றி ஐசுஜான்சி கூறியதாவது: நிஜத்தை இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும், நாம் நிஜமானவையே என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அந்த நிஜத்தை மாற்றும் ஒரு எண்ணமே நிஜமான எண்ணம். என்பதை படத்தின் மையக்கருவாக வைத்து கதைக்களத்தை அமைத்துள்ளேன். இதில் திகிலுடன், விறுவிறுப்பு, பரபரப்பு என அனைத்தும் நீக்கமற நிறைந்திருக்குமாறு திரைக்கதை அமைத்துள்ளேன். என்றார்.




