பிளாஷ்பேக்: சிவாஜி நடித்த கேரக்டரில் எம்ஜிஆர் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மக்காமிஷி' | தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி | தென்னிந்திய நடிகர் மீது தமன்னா குற்றச்சாட்டு | பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! |
ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் இயக்குனரானவர் பிரதீப் ரங்கநாதன். அதையடுத்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடி வசூல் சாதனை செய்தது. அப்படத்தில் ஒரு காட்சியில், இதுவரைக்கும் பக்காவா பேசிக்கிட்டு இருந்த திடீரென்று பார்த்திபன் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டியே என்று ஒரு டயலாக் பேசி இருப்பார்.
இந்த டயலாக்கின் பின்னணியில் தன்னை அவர் பழி வாங்கி விட்டதாக ஒரு பேட்டியில் நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். அதாவது பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி படம் வெளியானபோது பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கதையும், கோமாளி படத்தின் கதையும் ஒன்றாக இருப்பதாக ஒரு பிரச்சனை எழுந்திருக்கிறது. இதையடுத்து கே. பாக்யராஜ் முன்னிலையில் இந்த கதை சர்ச்சை குறித்து பேசி தனது உதவியாளருக்கு ரூ 10 லட்சம் வாங்கி கொடுத்து இருக்கிறார் பார்த்திபன். இது எல்லாமே கோமாளி படம் திரைக்கு வந்த நேரத்தில் நடந்துள்ளது.
இந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் அப்படி ஒரு டயலாக்கை அவர் வைத்திருக்கிறார் என்று கூறியுள்ள பார்த்திபன், அந்த டயலாக்கை முதலில் கேட்டு நானும் சிரித்து விட்டேன். ஆனால் நல்லா இருந்த நீ என்னடா பைத்தியம் ஆயிட்டியே என்பதை சொல்வதற்காகவே அவர் அப்படி வைத்திருப்பதை பின்னர் தான் புரிந்து கொண்டேன் என்று கூறியுள்ள பார்த்திபன், என்னை பழி வாங்கும் நோக்கத்தில் அந்த டயலாக்கை பிரதீப் ரங்கநாதன் வைத்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.