Advertisement

சிறப்புச்செய்திகள்

எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அயோத்தி கதை பிரச்சனையில் சுமூக முடிவு

16 மார், 2023 - 12:41 IST
எழுத்தின் அளவு:
Ayothi-movie-story-issued-solved

சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியான படம் அயோத்தி. வடநாட்டில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் ஒரு சாதாரண குடும்பத்தினர், வந்த இடத்தில் தங்களது குடும்பத்தலைவியை பறிகொடுத்து விட்டு, அவரது உடலுடன் ஊர் திரும்ப அவதிப்படுவதும், நாயகன் சசிகுமார் பல இன்னல்களை சந்தித்து அவர்களுக்கு உதவுவதும் என மனிதநேயம் பற்றி இந்த படம் பேசியிருந்தது. இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது. சசிகுமார் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருக்கு ஒரு கவுரவமான வெற்றி படமாகவும் இது அமைந்தது. இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் கதை எழுதிஇருந்தார்.

அதேசமயம் படம் வெளியாகி சில நாட்கள் கழித்து இந்த படத்தின் கதை தான் 2011ல் தனது வலைப்பக்கத்திலும் மேலும் தனது முகநூல் பக்கத்திலும் தான் எழுதிய, தனது நண்பர் ஒருவருக்கு நிகழ்ந்த உண்மை சம்பவத்தை, அப்படியே தழுவி எடுக்கப்பட்டுள்ளது என எழுத்தாளர் மாதவராஜ் என்பவர் புகார் தெரிவித்தார்.. ஆனால் இது பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தரப்பிலிருந்து பதில் வராவிட்டாலும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மந்திரமூர்த்தி ஆகியோர் இந்த விஷயத்தை பெரிதாக்க விரும்பவில்லை.

இந்த நிலையில் இந்த கதையை எழுதியதாக சொல்லப்படும் மாதவராஜை அழைத்து தயாரிப்பாளர், இயக்குனர் மந்திரமூர்த்தி இருவரும் அவரிடம் பேசி இந்த படம் ஓடிடியில் வெளியாகும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு டைட்டில் கார்டில் அவர்களது பெயருக்கு அங்கீகாரம் கொடுப்பதாக கூறி உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து இந்த கதை விவகாரம் தற்போது சுமூக முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கர் விருது குறித்து விமர்சித்த தேசிய விருது நடிகைநாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கர் ... டயட்டீசியனுக்கு மாதம் ஒரு லட்சம் சம்பளம் தரும் டாப்ஸி டயட்டீசியனுக்கு மாதம் ஒரு லட்சம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in