எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
2012ம் ஆண்டு வெளிவந்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அதன் பிறகு சில பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் “மனிதன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன்” ஆகிய படங்கள் மட்டும்தான் குறிப்பிடத்தக்க விமர்சனங்களைப் பெற்ற படங்களாக அமைந்தது. மற்ற படங்கள் குறிப்பிடத்தக்க வரவேற்பைக் கூடப் பெறவில்லை.
உதயநிதி தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரான பின் வெளிவரும் படமாக நாளை(மார்ச் 17) வெளியாக உள்ள 'கண்ணை நம்பாதே' படம் இடம் பெற உள்ளது. இப்படத்தைக் கடந்த நான்கு ஆண்டுகளாக தயாரித்து வந்தனர். இப்படம் ஆரம்பமாகும் போது திமுக இளைஞரணி செயலாளராக மட்டுமே இருந்த உதயநிதி அதன்பின் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகி, இப்படம் வெளியாகும் போது அமைச்சராகவும் ஆகிவிட்டார்.
ஒரு கிரைம் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் உதயநிதியுடன் பிரசன்னா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்திற்காக கடந்த ஒரு வாரமாக பல பேட்டிகளிலும் பங்கேற்றார். இந்தப் படத்தை அடுத்து உதயநிதி நடித்துள்ள கடைசி படமான 'மாமன்னன்' படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.