மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்து ஓடிடி தளத்தில் வெளிவந்த படம் 'சார்பட்டா பரம்பரை'. அப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டனர்.
ஆனால், அந்த அறிவிப்பில் படத்தின் இசையமைப்பாளர் பெயர் எதுவும் இடம் பெறவில்லை. முதல் பாகத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அவரது பின்னணி இசையும், பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின் 'எஞ்சாமி' பாடல் விவகாரத்தில் சந்தோஷ் நாராயணன், அறிவு இடையே சர்ச்சை ஏற்பட்டது. அதனால், பா ரஞ்சித் தனது அடுத்த படங்களுக்கு சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைக்கவில்லை.
அதற்கடுத்து அவர் இயக்கிய “நட்சத்திரம் நகர்கிறது” படத்திற்கு தென்மா இசையமைத்திருந்தார். தற்போது விக்ரம் நடிக்க இயக்கி வரும் 'தங்கலான்' படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்.
'சார்பட்டா பரம்பரை 2' படத்தின் அறிவிப்பு வெளியானதுமே அதற்கு, இசையமைப்பாளர்கள் சாம் சிஎஸ் வாழ்த்து தெரிவித்திருந்தார். சந்தோஷ் நாராயணனும் பா.ரஞ்சித், ஆர்யா ஆகியோரை டுவிட்டரில் டேக் செய்து, “வானம் விடிஞ்சிருச்சு காசு டா மேளத்தை,” என பதிவிட்டுள்ளார். பகையை மறந்து இருவரும் மீண்டும் இணைந்து பணி புரிவார்களா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.