சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்து ஓடிடி தளத்தில் வெளிவந்த படம் 'சார்பட்டா பரம்பரை'. அப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டனர்.
ஆனால், அந்த அறிவிப்பில் படத்தின் இசையமைப்பாளர் பெயர் எதுவும் இடம் பெறவில்லை. முதல் பாகத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அவரது பின்னணி இசையும், பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின் 'எஞ்சாமி' பாடல் விவகாரத்தில் சந்தோஷ் நாராயணன், அறிவு இடையே சர்ச்சை ஏற்பட்டது. அதனால், பா ரஞ்சித் தனது அடுத்த படங்களுக்கு சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைக்கவில்லை.
அதற்கடுத்து அவர் இயக்கிய “நட்சத்திரம் நகர்கிறது” படத்திற்கு தென்மா இசையமைத்திருந்தார். தற்போது விக்ரம் நடிக்க இயக்கி வரும் 'தங்கலான்' படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்.
'சார்பட்டா பரம்பரை 2' படத்தின் அறிவிப்பு வெளியானதுமே அதற்கு, இசையமைப்பாளர்கள் சாம் சிஎஸ் வாழ்த்து தெரிவித்திருந்தார். சந்தோஷ் நாராயணனும் பா.ரஞ்சித், ஆர்யா ஆகியோரை டுவிட்டரில் டேக் செய்து, “வானம் விடிஞ்சிருச்சு காசு டா மேளத்தை,” என பதிவிட்டுள்ளார். பகையை மறந்து இருவரும் மீண்டும் இணைந்து பணி புரிவார்களா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.




