நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
அருண் விஜய் நாயகனாக நடித்த யானை படத்தை அடுத்து விஷாலை வைத்து தனது புதிய படத்தை இயக்குகிறார் ஹரி. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை படங்களில் நடித்த விஷால் இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக அவருடன் இணைகிறார். இதற்கு முன்பு விக்ரம் நடித்த சாமி, சாமி 2 மற்றும் சூர்யா நடிப்பில் உருவான சிங்கம் படங்களின் மூன்று பாகங்களையும் போலீஸ் கதையில் இயக்கிய ஹரி, தற்போது விஷாலை வைத்து இயக்கும் புதிய படத்தையும் போலீஸ் கதையிலேயே இயக்கப் போகிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.