கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நடிகர் சிம்பு தற்போது கேங்ஸ்டராக நடித்து முடித்துள்ள படம் பத்து தல. இந்த படம் வருகிற மார்ச் மாதம் திரைக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகவே சிம்புவின் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாவதும், அதையடுத்து அவரது பெற்றோர் மறுப்பு தெரிவிப்பதுமாக இருந்து வருகிறது. தற்போது சிம்புவுக்கு 40 வயது ஆகிவிட்டதால் அவரது பெற்றோர் விரைவில் அவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு இருப்பதாக மீண்டும் ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
சிம்புவின் ஜாதகத்துக்கு பொருத்தக்கூடிய பெண்ணை அவர்கள் தேடி வந்த நிலையில், தற்போது இலங்கையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகளை சிம்புவுக்கு அவரது தந்தையான டி. ராஜேந்தர் பேசி முடித்து வைத்திருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு சிம்புவின் திருமணம் குறித்து வெளியான செய்திகள் வதந்தியாகி விட்டபோதும் இந்த முறை கண்டிப்பாக சிம்பு திருமணம் நடைபெற்று விடும் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.