300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நடிகர் சிம்பு தற்போது கேங்ஸ்டராக நடித்து முடித்துள்ள படம் பத்து தல. இந்த படம் வருகிற மார்ச் மாதம் திரைக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகவே சிம்புவின் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாவதும், அதையடுத்து அவரது பெற்றோர் மறுப்பு தெரிவிப்பதுமாக இருந்து வருகிறது. தற்போது சிம்புவுக்கு 40 வயது ஆகிவிட்டதால் அவரது பெற்றோர் விரைவில் அவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு இருப்பதாக மீண்டும் ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
சிம்புவின் ஜாதகத்துக்கு பொருத்தக்கூடிய பெண்ணை அவர்கள் தேடி வந்த நிலையில், தற்போது இலங்கையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகளை சிம்புவுக்கு அவரது தந்தையான டி. ராஜேந்தர் பேசி முடித்து வைத்திருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு சிம்புவின் திருமணம் குறித்து வெளியான செய்திகள் வதந்தியாகி விட்டபோதும் இந்த முறை கண்டிப்பாக சிம்பு திருமணம் நடைபெற்று விடும் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.