புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சிகை, பக்ரீத் படங்களை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்கி உள்ள புதிய படம் 'இரவு'. இதனை பக்ரீத் படத்தை தயாரித்த எம்.எஸ் முருகராஜ் தயாரித்துள்ளார். அரியா செல்வராஜ் என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்கள் தவிர மன்சூரலிகான், சுனிதா கொகய், சாந்தனா பரத், தீபா சங்கர், பொன்னம்பலம், ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் தயாநிதி ஒளிப்பதிவு செய்கிறார். எல்.வி.முத்து கணேஷ் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஜெகதீசன் சுபு கூறியதாவது : சிகை படத்தில் திருநங்கையின் காதலை சொன்னேன், பக்ரீத்தில் ஒட்டகத்திற்கும், மனிதனுக்குமான அன்பை சொன்னேன். இந்த படம் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம். ஒரு நாளில் நடக்கிற மாதிரியான கதை. தன் முன்னால் நடப்பது நிஜமா, கற்பனையான என்று தெரியாத ஒரு இளைஞன் அந்த பிரச்சினையில் இருந்து எப்படி வெளியில் வருகிறான் என்பதுதான் படத்தின் கதை. என்றார்.