நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
அஜித்தின் 'துணிவு' படம் வெற்றி பெற்றது. அதை கொண்டாட குடும்பத்துடன் ஜார்ஜியா சென்றார் அஜித். அங்கு 10 நாட்களுக்கு மேல் குடும்பத்துடன் பொழுதை கழித்த அவர் நேற்று அதிகாலையில் சென்னை திரும்பினார்.
இன்று முதல் அவர் தனது 62வது படத்தின் பணிகளை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே அஜித்துக்காக விக்னேஷ் சிவன் லைக்கா நிறுவனத்திடம் சொல்லி ஓகே வாங்கியிருந்த கதையை அஜித் புறக்கணித்து விட்டார். லைக்கா நிறுவனமும் அதை ஏற்று விக்னேஷ் சிவனை கழற்றி விட்டுவிட்டது. தற்போது மகிழ்திருமேனி கதைக்கு லைக்கா நிறுவனம் ஒப்புதல் அளித்து விட்டது.
சென்னை திரும்பியுள்ள அஜித்தை மகிழ்திருமேனி விரைவில் சந்தித்து கதை சொல்ல இருக்கிறார். ஏற்கனவே ஒருவரிக்கதை பிடித்து ஓகே சொல்லி உள்ளார். இருந்தாலும் முழுகதையையும் அவர் கேட்க உள்ளார். ஒருவேளை அஜித்துக்கு பிடித்து விட்டால் படத்தை பற்றிய அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும். மகிழ்திருமேனி கதை பிடிக்காவிட்டால் மேலும் தாமதமாகாலம் என்று தெரிகிறது.