மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் மொழிக்கு ஒருவர் என மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தெலுங்கு நடிகர் சுனில் என பலரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
கடந்த மாதத்திலேயே ஐதராபாத், ஜெய்சல்மர் என வெவ்வேறு லொக்கேஷன்களில் நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மங்களூரில் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் மோகன்லாலுடனும் ஜெய்செல்மரில் ஜாக்கி ஷெராப்புடனும் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஏற்கனவே சென்னையில் சிவராஜ்குமார் நடித்த சில காட்சிகள் படமாக்கப்பட்டது.
தற்போது மங்களூருவில் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சிவராஜ்குமார் இருவரும் இணைந்து நடிக்கும் முக்கியமான சண்டைக்காட்சி படமாக்கப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து இரவு நேரத்தில் ரஜினிகாந்த் மற்றும் சிவராஜ்குமார் இருவரும் இணைந்து ரிலாக்ஸாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இதை உறுதிப்படுத்தி உள்ளது.