மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தற்போது இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் தான் நடித்து வருவதாக ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியிட்டுள்ளார் தமன்னா. அது குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தமிழில் சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நான், இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் பட வாய்ப்புகளே இல்லாமல் இருக்கும்போது ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது ஒரு கனவு போல் உள்ளது.
அந்த வகையில் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்டநாள் கனவு இப்போது நனவாகி இருக்கிறது. அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலா சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறேன். இதற்கு முன்பு சைராவில் அவருடன் நடித்திருந்தாலும் அது சிறிய வேடம். ஆனால் இந்த போலா சங்கர் படத்தில் முழுக்க முழுக்க கதாநாயகியாக நடித்து வருகிறேன். அதோடு சிரஞ்சீவி உடன் இணைந்து நடனமாட வேண்டும் என்பதும் எனது நீண்ட நாள் கனவு. அதனால் இந்த படத்தில் அவருடன் நடிக்கும் பாடல் காட்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார் தமன்னா.