டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தற்போது இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் தான் நடித்து வருவதாக ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியிட்டுள்ளார் தமன்னா. அது குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தமிழில் சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நான், இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் பட வாய்ப்புகளே இல்லாமல் இருக்கும்போது ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது ஒரு கனவு போல் உள்ளது.
அந்த வகையில் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்டநாள் கனவு இப்போது நனவாகி இருக்கிறது. அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலா சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறேன். இதற்கு முன்பு சைராவில் அவருடன் நடித்திருந்தாலும் அது சிறிய வேடம். ஆனால் இந்த போலா சங்கர் படத்தில் முழுக்க முழுக்க கதாநாயகியாக நடித்து வருகிறேன். அதோடு சிரஞ்சீவி உடன் இணைந்து நடனமாட வேண்டும் என்பதும் எனது நீண்ட நாள் கனவு. அதனால் இந்த படத்தில் அவருடன் நடிக்கும் பாடல் காட்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார் தமன்னா.




