ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | ஆஸ்கர் விருது: ஆறு தமிழ் படங்கள் உட்பட 29 இந்திய படங்கள் பரிந்துரை | 'புஷ்பா 2' ரிலீஸ், மீண்டும் உறுதி செய்த படக்குழு | பிளாஷ்பேக் : 10 வேடங்களில் நடித்த முதல் நடிகர் | ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி |
பாபி சிம்ஹா நடித்துள்ள படம் வசந்த முல்லை. இந்த படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தல் வசந்த கோகிலா என்ற பெயரில் தயாராகி உள்ளது. பாபி சிம்ஹாவுடன் காஷ்மீரா பர்தேசி நடித்துள்ளார். முக்கியமான கேரக்டரில் கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும், தெலுங்கு, தமிழில் ஆர்யாவும் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் ரமணன் புருஷோத்தமா இயக்கி உள்ளார். ரஞ்சனி தல்லூரியுடன் இணைந்து பாபி சிம்ஹாவின் மனைவியும், நடிகையுமான ரேஷ்மி மேனன் தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. கன்னட டீசரை சிவராஜ்குமாரும், தெலுங்கு டீசரை சிரஞ்சீவியும் வெளியிட்டனர். ஆனால் தமிழ் டீசரை எந்த ஹீரோவும் வெளியிடவில்லை. நேற்று நடந்த விழாவுக்கு வந்த பத்திரிகையாளர்களை கொண்டு வெளியிட்டனர்.
இதுகுறித்து பின்னர் பேசிய பாபி சிம்ஹா “தமிழிலும் பெரிய ஹீரோவை கொண்டு வெளியிடலாம் என்று யோசித்தோம். அதற்கு சரியான நேரம் அமையவில்லை. என்றாலும் படத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் பத்திரிகையாளர்கள் வெளியிட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி” என்றார்.
பின்னர், ஜிகிர்தண்டா 2ம் பாகத்தில் ஏன் நடிக்கவில்லை என்று கேட்டபோது “அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை” என்று பதிலளித்தார். என்றாலும் தனக்கு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நடித்து கொடுத்த ஆர்யா, ஒரு செல்போன் மெசேஜை பார்த்துவிட்டு வீட்டுக்கு அழைத்து டீசரை வெளியிட்ட சிரஞ்சீவி, சிவராஜ்குமார் ஆகியோரை நெகிழ்ந்து பாராட்டினார் பாபி சிம்ஹா.