ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராம், அடுத்ததாக நிவின் பாலியை வைத்து ‛ஏழு கடல் ஏழு மலை' என்ற படத்தை இயக்கி வருகிறார். நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை 'வி ஹவுஸ் ப்ரொடக்சஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ராம் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ‛தமிழ்ப்படம், சென்னை-28' படங்களில் நடித்தசிவா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல ஓடிடி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு அடுத்த மாத துவக்கத்தில் அல்லது மத்தியில் துவங்கவுள்ளதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.