ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் என்பது நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதியால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது. இந்த அமைப்போடு எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா, சோ, லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் பணியாற்றினார்கள். ஜெயலிதாவின் தயார் சந்தியா இந்த அமைப்பின் நிரந்தர நடிகையாக இருந்தார்.
இந்த அமைப்பு நடத்திய வியட்நாம் வீடு சுந்தரம், பரீட்சைக்கு நேரமாச்சு, கவுரம் போன்ற நாடகங்கள் திரைப்படங்களாக தயாரானது. அந்த வரிசையில் தற்போது ஒய்.ஜி.மகேந்திரன் நடித்து வரும் சாருகேசி நாடகமும் திரைப்படமாகிறது. இதனை அவரே இயக்குகிறார்.
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இசை கலைஞனின் வாழ்க்கையை சுற்றி கதை நடக்கிறது. இந்த நாடகத்தை திரைப்படமாக ஸ்ரீ அக்ரஹாரம் ராஜலக்ஷ்மி புரொடக்ஷன் தயாரிக்கவுள்ளது. இயக்குநர் வசந்த் எஸ்.சாய் இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்க உள்ளதோடு கிரியேட்டிவ் இயக்குநராகவும் பங்காற்ற உள்ளார். ஒய் ஜி மகேந்திரன் முதன்மை வேடத்தில் நடித்து, இயக்குகிறார். இதர நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படுகிறது.
நாடகத்தின் 50வது காட்சியில் திரைப்படத்தின் பணியை ரஜினிகாந்த் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் ஒரு திரைப்படத்திற்குரிய அத்தனை அம்சங்களும் இந்த நாடகத்தில் இருக்கிறது. அதனால் இந்த படம் வெற்றி பெறும் அதற்கு எனது வாழ்த்துகள். நாடகத்தில் நீண்ட வசனம் கொண்ட ஒரே ஷாட் வரும். அது அப்படியே படத்திலும் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.