கூலி படத்திலிருந்து 'சிக்கிட்டு' பாடல் வெளியீடு | போதை பொருள் வழக்கு : கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை | ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் நடிகை வரலட்சுமி | என்னது, மமிதா பைஜூ கேரக்டர் பெயர் இதுவா? | ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்தது : 100 நாள் சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் விஜய் | ‛குட் நைட்' பட இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் அளித்த பிறந்தநாள் பரிசு | மேலும் மூன்று மொழிகளில் வெளியான ஏஸ் | தக் லைப் - ஓடிடி ரிலீஸ் குறித்து, அன்று பாராட்டு, இன்று அபராதம் | தனுஷின் 5வது 100 கோடி படம் 'குபேரா' | அதிகபட்ச வியாபாரத்தில் 'கூலி' : மீண்டும் ரஜினியின் உச்சம் |
தமிழ் திரையுலகில் எப்படி நடிகர் சூர்யாவோ, அதேபோல மலையாள திரையுலகில் நடிகர் பிரித்விராஜ் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் பிரித்திவிராஜ் தற்போது தெலுங்கில் சலார் படத்தில் வில்லனாகவும் இந்தியில் படே மியான் சோட்டே மியான் படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யாவும், பிரித்விராஜூம் அவர்களின் மனைவியர் உடன் சேர்ந்து சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர்.
இது குறித்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள நடிகர் பிரித்விராஜ், ‛‛எங்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுடன் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பிரித்விராஜ் பிஸியாக நடிக்க தொடங்கிய சமயத்தில் ஜோதிகாவுடன் இணைந்து மொழி என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சூர்யாவும் பிரித்விராஜூம் குடும்பத்துடன் சந்தித்திருப்பது பல புதிய யூகங்களையு எதிர்பார்ப்புகளையும் கிளப்பி விட்டுள்ளது.