தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கன்னட சினிமாவில் அறிமுகமாகி இப்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் ஹிந்தியிலும் கால்பதித்து அங்கும் நடித்து வருகிறார். இந்நிலையில், காந்தாரா படத்தை பார்க்கவில்லை என கூறியது, கன்னட சினிமாவை புறக்கணிப்பது மாதிரியாக அவர் நடந்து கொள்வது என அவர் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் சிலமாதங்களாக ராஷ்மிகா நிறைய டிரோல்களில் சிக்குகிறார்.
தன் மீதான விமர்சனங்களுக்கும், டிரோல்களுக்கும் ராஷ்மிகா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛ஓராண்டாகவே என்னை நிறையபேர் டிரோல் செய்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் பையன் என்கிறார்கள். இல்லையெனில் பருமனாக இருப்பதாக சொல்கிறார்கள். பேசாமல் இருந்தால் திமிரு என்கிறார்கள். பேசினாலும் தவறு என்கிறார்கள். நான் என்ன தான் செய்வது. சினிமாவை விட்டு நான் விலக வேண்டும் என நினைக்கிறார்களா. என்னதான் உங்களுக்கு பிரச்னை. உங்களின் வார்த்தைகள் என்னை காயப்படுத்துகின்றன. எனக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்புவது ஏன் என புரியவில்லை'' என்றார்.