பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை |
நடிகர் கவுதம் கார்த்திக் சில ஆண்டுகளாகவே வருடத்திற்கு ஒரு படம் தான் நடித்து. இந்த ஆண்டு பத்து தல படத்தில் சிம்புவுடன் நடித்து முடித்துள்ளார். 16 ஆகஸ்ட் 1947 என்ற படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் அடுத்து அவா் ‛கிரிமினல்' என்ற படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை பர்சா பிக்சர்ஸ், பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் மீனாட்சி சுந்தரம், கார்த்திகேயன் தயாரிக்கிறார்கள். தக்ஷினா மூர்த்தி ராமர் என்ற அறிமுகம் இயக்குனர் இயக்குகிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். கவுதம் கார்த்திக்குடன் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
மதுரையை கதை களமாக கொண்ட கிரைம் த்ரில்லராக உருவாகும் இந்தபடம் ஒரு கிரிமினலுக்கும், போலீஸ் அதிகாரிக்குமான மோதல் கதையாக தயாராகிறது. இதில் கிரிமினலாக கவுதம் கார்த்திக்கும், போலீஸ் அதிகாரியாக சரத்குமாரும் நடிக்கிறார்கள்.