அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழகத்தைத் தவிர இதர தென்னிந்திய மாநில நகரங்களில் பெங்களூருவில்தான் அதிகமான தியேட்டர்களில் தமிழ்ப் படங்கள் வெளியாகும். இந்த வருட பொங்கலுக்கு வெளியாகும் 'வாரிசு, துணிவு' ஆகிய இரண்டு படங்களுமே அங்கு அதிக தியேட்டர்களில் வெளியாகின்றன. அவற்றிற்கான முன்பதிவுகளும் பரபரப்பாக நடந்து வருகின்றன.
அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்திற்கு அதிகாலை 2 மணிக்கு சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. ரஜினிகாந்த்திற்குப் பிறகு அஜித் படத்திற்குத்தான் இவ்வளவு அதிகாலையில் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றதாம். அஜித் நடித்துள்ள ஒரு படத்திற்கு அதிகாலையில் காட்சி நடப்பது இதுதான் முதல் முறை என்பது கூடுதல் தகவல்.
இதுவரையிலும் லட்சுமி, கிருஷ்ணா, பாலாஜி, வைபவ், சீனிவாசா ஆகிய தியேட்டர்களில் 2 மணிக்கான காட்சிகளின் முன்பதிவு முழுவதுமாக முடிந்துவிட்டதாம். அதன் மூலம் மட்டுமே 20 லட்ச ரூபாய் வரையில் வசூலாகியுள்ளது என்கிறார்கள். அதிகாலை 3 மணிக்கும், 4 மணிக்கும் பல தியேட்டர்களில் காட்சிகளுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கர்நாடகாவில் மட்டும் 40க்கும் மேற்பட்ட சிங்கிள் தியேட்டர்களிலும், 50க்கும் மேற்பட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் 'துணிவு' படம் வெளியாகிறது.