300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
ஜனவரி 11ம் தேதி விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் இந்த இரண்டு படங்களும் வெளியாக உள்ளது.
பொதுவாக முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், 'வாரிசு, துணிவு' படங்களின் சிறப்புக் காட்சிகளை அதிகாலை 4 மணிக்கு நடத்த தியேட்டர்காரர்கள் தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஒரே சமயத்தில் இரண்டு படங்களையும் திரையிட்டால் தியேட்டர்களில் குவியும் அவர்களது தீவிர ரசிகர்களை கட்டுப்படுத்துவது சிரமம் என தியேட்டர்காரர்கள் நினைக்கிறார்களாம். மேலும், தியேட்டர்களில் ஏதாவது சேதம் ஏற்பட்டால் அது தங்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறார்களாம்.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் திரையிட முடியும். ஆனால், சிங்கிள் ஸ்கிரீன்களில் எந்தக் காட்சியை யாருக்கு முதலில் தருவது என்ற குழப்பம் நிலவுகிறதாம். எனவே, தேவையற்ற மோதல்களை சமாளிக்கும் விதமாக காலை 8 மணி காட்சியிலிருந்து படத்தை ஆரம்பிக்கலாமா எனவும் யோசித்து வருகிறார்களாம். நாளை முதல் இரண்டு படங்களுக்கும் முன்பதிவு ஆரம்பமாக உள்ள நிலையில் அதிகாலை சிறப்புக் காட்சிகள் குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்வார்கள் எனத் தெரிகிறது.