கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
ஜனவரி 11ம் தேதி விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் இந்த இரண்டு படங்களும் வெளியாக உள்ளது.
பொதுவாக முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், 'வாரிசு, துணிவு' படங்களின் சிறப்புக் காட்சிகளை அதிகாலை 4 மணிக்கு நடத்த தியேட்டர்காரர்கள் தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஒரே சமயத்தில் இரண்டு படங்களையும் திரையிட்டால் தியேட்டர்களில் குவியும் அவர்களது தீவிர ரசிகர்களை கட்டுப்படுத்துவது சிரமம் என தியேட்டர்காரர்கள் நினைக்கிறார்களாம். மேலும், தியேட்டர்களில் ஏதாவது சேதம் ஏற்பட்டால் அது தங்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறார்களாம்.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் திரையிட முடியும். ஆனால், சிங்கிள் ஸ்கிரீன்களில் எந்தக் காட்சியை யாருக்கு முதலில் தருவது என்ற குழப்பம் நிலவுகிறதாம். எனவே, தேவையற்ற மோதல்களை சமாளிக்கும் விதமாக காலை 8 மணி காட்சியிலிருந்து படத்தை ஆரம்பிக்கலாமா எனவும் யோசித்து வருகிறார்களாம். நாளை முதல் இரண்டு படங்களுக்கும் முன்பதிவு ஆரம்பமாக உள்ள நிலையில் அதிகாலை சிறப்புக் காட்சிகள் குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்வார்கள் எனத் தெரிகிறது.